Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Published On: 11:31 PM

ஈராக்கின் டியாலா மாகாணத்தில் குண்டுத் தாக்குதல் : 34 பேர் பலி, 40 பேர் காயம்





ஈராக்கின் டியாலா மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 40 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு டேஷ் ரக்ஃபிரி தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஈராக்கின் டியாலா மாகாணத்தின் பிரிஷ்டெஹ் மாவட்டத்தில் உள்ள கிழக்கு முக்தாதியா நகரில் அமைந்துள்ள மசூதி ஒன்றினுள்ளேயே இந்த குண்டுத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட டியாலா மாகாண பாதுகாப்பு வட்டாரங்கள், நேற்று உள்ளூர் நேரப்படி நண்பகலில் இறுதிச் சடங்கு ஊர்வலம் ஒன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாவும், இதன்போது 42 மக்கள் காயமடைந்துள்ளதாவும் தெரிவித்துள்ளன.

இதேவேளை முக்தாதியா ஆளுநர் அட்னான் அல்-தமிமி இது தொடர்பில் குறிப்பிடுகையில், “குறித்த பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து சடலங்களை அப்புறப்படுத்தியதோடு, காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்” எனத் தெரிவித்தார்.
Print Friendly and PDF
Share this article :


Related News
முக்கிய குறிப்பு: அநுராதபுரநிவுஸ் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு அநுராதபுரநிவுஸ் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு அநுராதபுரநிவுஸ் நிர்வாகத்துடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -

0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். :

 

Sign Up to Mohamed Newsletter

© 2016 ANURADHAPURANEWS NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 75 48 33 8