Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Rajaratamediaஎன டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Rajaratanews1st@gmail.com SMS 0717548338- call: 0717548338 Admin-message
Headlines
Admin-message
Published On: 7:57 AM

மகிந்த படுகொலையை அம்பலப்படுத்திய மேத்யூலீசை வெளியேற்றிய ஐ.நா!



ஐ.நாவின் ஊழல்களையும், குறிப்பாக தமிழீழப்படுகொலையில் பங்குபெற்றதைக் குறித்தும் அம்பலப்படுத்திக்கொண்டிருந்த பத்திரிக்கையாளர் மேத்யூலீ ஐ.நாவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இவர் பணியாற்றிய இன்னர்-சிட்டி பிரஸ் பத்திரிக்கை ஐ,நாவின் நடவெடிக்கைகளைக் குறித்து விமர்சனப்பூர்வமாகவும், அதன் நம்பகமற்றத் தன்மைகொண்டவர்களையும் அம்பலப்படுத்திக்கொண்டிருந்தது.

ஐ.நாவின் பத்திரிக்கையாளர் குழுவின் தலைவருக்கு இலங்கையின் அதிகாரி பலிதகொஹன்னா லஞ்சமாக வாடகை என்கிற பெயரில் பணம் கொடுத்தது முதல், ஈழப்படுகொலையில் ஐ.நா இழைத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை மூடி மறைக்க முயன்ற தருணத்தில், அந்த அறிக்கையின் மிக முக்கிய பக்கங்களை எடுத்து அம்பலப்படுத்தினார்.

இலங்கையைப் பற்றி தொடர்ந்து குரல் எழுப்பியவர் இவர். ஐ.நாவிற்கு சங்கடமேற்படுத்தும் வகையில் இவரது கேள்விகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது.

சேனல்4 காணொளியை ஐ.நாவில் திரையிட ஐ.நா அதிகாரிகள் அனுமதிக்கவில்லை , மாறாக, இலங்கை சேனல்4ற்கு எதிராக எடுத்த பொய் காணொளி திரையிடப்பட்டதை கண்டித்தும் இவர் கேள்வி எழுப்பியவர்…

விஜய்நம்பியாரின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தியதில் இருந்து , கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைத்த தகவல் வரை ஐ.நாவின் செயல்பாடுகளை உலகிற்கு கொண்டுவந்த அச்சமற்ற ’போராளி’ பத்திரிக்கையாளர்.

பான் -கி-மூனிற்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்புகள் என பல்வேறு விவரங்களை உலகிற்கு அம்பலப்படுத்தி தமிழர்களுக்கு பெரும் துணையாக இருந்த மாத்யூலீக்கு தமிழர்கள் எவ்வகையான ஆதரவை வழங்கப் போகிறார்கள் ? குறைந்த பட்சம் ஐ.நாவிற்கு எதிர்ப்பினை பதிவு செய்வார்களா?..

விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டுகிறோம், விமர்சனம் செய்கிறோம் என்று இலக்கிய-படைப்பாளி-அறிவுசீவிகள் முதல் பலர் களம் இறங்கிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் ‘இலங்கையின் குற்றங்கள்’ , ‘சர்வதேசத்தின் குற்றப்பங்களிப்புகள்’ ஆகியவற்றை சமரசமின்றி உலகிற்கு அம்பலப்படுத்தும் இதுபோன்ற போராளிகளே தமிழினத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கு தேவையானவர்கள்.

இவரது குரல் நசுக்கப்படுவதற்கு எதிராக தமிழகத்தின் அறிவுசீவிகள் , படைப்பாளிகள், இலக்கியவாதிகள் குரல் கொடுப்பார்களா?…

கருத்துச் சுதந்திரமற்றவர்கள் என்று புலிகளுக்கு எதிராக பக்கம் பக்கமாக எழுதிய கனவானகள் , ஐ.நாவின் இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராகவும் பேசுவார்களா?

ஈழம் என்று பேசினால் தங்களது தரம் தாழ்ந்துவிடும் என்று நகர்ந்து செல்லும் பல்வேறு அறிவிசீவிகள் மேத்யூலீ ஆச்சரியமானவராகவே தோன்றுகின்றார்.

என்.ஜி.ஓக்களின் தாயகமாக விளங்கும் ஐ.நாவினை எதிர்த்து குரல் கொடுக்க மறுக்கும் தமிழகத்தின் அறிவுசீவிகளின் பின்னனியில் இயங்குவதும் என்.ஜி.ஓக்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமன்று.

மேத்யூலீக்காக குரல் கொடுப்பார்களா? இல்லையா என்று இவர்களது நேர்மையை அறிந்துகொள்ள முயல்வோம்.
Print Friendly and PDF
Share this article :


Related News
முக்கிய குறிப்பு: அநுராதபுரநிவுஸ் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு அநுராதபுரநிவுஸ் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு அநுராதபுரநிவுஸ் நிர்வாகத்துடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -

0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். :

 

Sign Up to Mohamed Newsletter

© 2016 ANURADHAPURANEWS NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 75 48 33 8